வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்




நான் மகான் அல்ல படத்துல பாட்டு எல்லாமே சூப்பரா இருக்கு..அதும் அந்த கண்ணோரம் காதல் வந்தால் பாட்டு கேக்கும் போது அது என்னனு தெரியல அப்படி ஒரு Feelings ..பாட்ட நம்ம யுவன் படிச்சு இருக்கார் சூப்பரா இருக்கு..நீங்களும் கேட்டு பாருங்க அப்பறம் தெரியும்...


இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போல தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைத்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே
அடங்காதே ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு
சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் - ஒஹ்ஹ …
கூட வந்து நீ நிற்பதும்
கூடு விட்டு நான் செல்வதும்
தொடர்ருதே தொடருதே நாடகம் ..
பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம் ..
நேரங்கள் தீருதே வேகங்கள்
கூடுதே
பூவே உண் கண்ணுக்குள்ளே பூமி
பந்து சுத்துதே ..
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்ப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லர்மே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் -ஒஹ்ஹ்ஹ ..
ஹே , என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணமல் நானில்லை -
ஒஹ்ஹ ..
என்மீதிலே உன் வாசனை
எப்போதும் வீச பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழவில்லை -
ஒஹ்ஹ
நீ என்னை காண்பதே வானவில்
போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல்
நெஞ்சில் சிந்துதே ..
ஒஹ்ஹ …
ஒஹ்ஹ …
கண்ணோரம் காதல் வந்தால்
கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால்
எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை
நீ மட்டும் போதும் போதும் - ஒஹ்ஹ …

வெள்ளி, 16 ஜூலை, 2010

பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர் தியரி ஹென்றி ஓய்வு




பிரான்ஸ் கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், நட்சத்திர வீரர் தியரி ஹென்றி.

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னணி வீரர் தியரி ஹென்றி. கடந்த 1998 ம் ஆண்டு உலககோப்பை மற்றும் 2000 ல் நடந்த யூரோ கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றவர். இதுவரை 123 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 51 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். கடந்த 2006 ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலககோப்பை தொடரின் பைனலுக்கு, பிரான்ஸ் அணி முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த உலககோப்பை தொடரின், லீக் சுற்றிலேயே வெளியேறி சொதப்பியது பிரான்ஸ் அணி. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார் ஹென்றி.

ஓய்வு: இந்நிலையில் பிரான்ஸ் அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஹென்றி. இது குறித்து அவர் கூறுகையில்,"" அணியில் நீடிக்க வேண்டும் எனில், 100 சதவீதம் உடற்தகுதி வேண்டும். இதனால் பல முறை ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு இதுவே சரியான தருணம் என கருதுகிறேன்,'' என்றார். பிரான்ஸ் அணியிலிருந்து ஓய்வு பெற்ற ஹென்றி, நியூயார்க் ரெட் புல்ஸ் அணி சார்பில் கிளப் போட்டிகளில் விளையாட உள்ளார்.

திங்கள், 12 ஜூலை, 2010

சிறந்த வீரர் ஃபோர்லான்; தங்க ஷூ முல்லெருக்கு




உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சிறந்த கால்பந்து வீரராக உருகுவேயின் டீகோ ஃபோர்லானும், அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற மகுடத்திற்கு ஜெர்மனி வீரர் முல்லரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தப் போட்டியி்ல் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.

உருகுவே - ஜெர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால், மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர்.

இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார். மற்றவர்கள் தலா ஒருமுறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர். இதையடுத்து கோல்டன் ஷூ விருது முல்லருக்குக் கிடைத்தது.

இது தவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது

2006-ம் ஆண்டு போட்டியில் ஜெர்மனியின் குளோஸுக்கு கோல்டன் ஷு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 30 ஜூன், 2010

நெ‌ல்லை, பா‌ண்டிய‌ன் விரைவு இரயில்க‌ளி‌ன் நேரம் மாற்றம்




செ‌ன்னை எழு‌ம்பூ‌‌ரி‌ல் இரு‌ந்து புற‌ப்படு‌ம் நெல்லை, பா‌ண்டிய‌ன் விரைவு இர‌யி‌ல்க‌ளி‌ன் நேரமு‌ம், செ‌ன்‌ட்ர‌லி‌ல்‌ இரு‌ந்து புற‌ப்படு‌ம் மும்பை ‌விரைவு இர‌யி‌‌லி‌ன் நேர‌மு‌ம் ம‌ா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் ‌விரைவு இர‌யி‌‌‌ல் காலை 11.45 மணிக்கு பதிலாக இனி காலை 11.55 மணிக்கு புறப்ப‌ட்டு‌ச் செ‌ல்லு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் இரயில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் பாட்னாவில் இருந்து பெங்களூர் செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பெங்களூரில் இருந்து தர்பங்கா செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 4.15 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழும்பூரில் இருந்து புறப்படும் செங்கோட்டை பொதிகை ‌விரைவு இர‌யி‌ல் இரவு 8.50 மணிக்கு பதிலாக இனி 8.05 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் இரவு 9.15 மணிக்கு பதி‌க்கு புற‌ப்படு‌ம் நெ‌ல்லை ‌விரைவு இர‌யி‌ல் இரவு 8.50 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இரவு 9.45 மணிக்கு புற‌ப்படு‌ம் மதுரை பாண்டியன் ‌விரைவு இர‌யி‌ல் இரவு 9.15 மணிக்கு புறப்ப‌ட்டு செ‌ல்லு‌ம் எ‌ன்று‌ம் எழும்பூர்-ராமேசுவரம் இரயில் 7.55 மணிக்கு பதிலாக 9.40 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌‌வி‌‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழும்பூரில் இருந்து பகல் 1.05 மணிக்கு புற‌ப்படு‌ம் ராமேசுவரம்-வாரணாசி இரயில் 1.10 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ தெ‌ற்கு இர‌யி‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

திங்கள், 21 ஜூன், 2010

முத்த காட்சியில் நடித்துவிட்டு கதறி அழுத நடிகை





பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஆறாவது வனம் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி, ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வசித்து வருகிறார். அந்த கிராமம் அப்படி வெறிச்சோடி கிடப்பதற்கு காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் கரு. இதில் புதுமுகங்கள் பூஷண் -வித்யா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் புவனேஷ் இயக்குகிறார். எஸ்.எம்.தியாகராஜன் தயாரிக்கிறார்.

கதைப்படி, நாயகனும், நாயகியும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும், 2 சாதியை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க துடிக்கிறார்கள். கதாநாயகன் பூஷண், கதாநாயகியின் தாய்மாமனை வெட்டி சாய்ப்பதற்கு அரிவாளுடன் பாய்ந்து வருகிறான். அதைப்பார்த்த கதாநாயகி வித்யா, தாய் மாமனையும் காப்பாற்ற வேண்டும்....காதலனையும் கொலைப்பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்... அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறார். கதாநாயகனின் மனதை மாற்றுகிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். உடனே, அரிவாளுடன் பாய்ந்து வரும் கதாநாயகன் பூஷணை கட்டிப்பிடித்து, உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார்.

இந்த காட்சியை படமாக்க இயக்குனர் புவனேஷ் திட்டமிட்டார். முத்தம் கொடுப்பது பற்றி நாயகியிடர், டைரக்டர் விளக்கினார். முதலில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கத் தயங்கிய அறிமுக நாயகி வித்யா, பின்னர் ஒப்புக் கொண்டார். பொள்ளாச்சி அருகில் உள்ள மலைப்பகுதியில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேர்களுக்கு மத்தியில், அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டது. நடித்து முடித்ததும், வித்யா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதார். அழுதபடியே அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு போய் விட்டார். அங்கு போனபிறகும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. டைரக்டர் புவனேஷ் ஓட்டலுக்கு சென்று வித்யாவை சமாதானப்படுத்தி, படமாக்கப்பட்ட காட்சியை `மானிட்டரில்' திரையிட்டு காண்பித்தார். விரசம் இல்லாமல் அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டு இருந்ததால், வித்யா சமாதானம் ஆனார். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி மலைப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

புதன், 16 ஜூன், 2010

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி




ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற் றோரிடம் வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பள்ளியில் நடந்த சம்பவம் உண்மைதான். எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. மாணவியின் விருப்பமின்றி டி.சி.,யை கொடுக்க கூடாது. மாணவியின் நலன் கருதி அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

செவ்வாய், 15 ஜூன், 2010

உலகக்கோப்பை இறுதியே கனவு - சச்சின் டெண்டுல்ல்கர்




2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதையடுத்து, குறிப்பாக இறுதிப் போட்டி தன் சொந்த ஊரான மும்பையில் நடைபெறுவதையடுத்து இறுதிப் போட்டியில் நுழைவதுதான் கனவு என்று இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

"உலகக்கோப்பையைப் பொறுத்தவரை அனைத்தும் ஒரு வளர்ச்சிப்போக்குதான், நாங்கள் உடனடியாக 50-வது ஃபுளோருக்குத் தாவ விரும்பவில்லை. முதலில் கிரவுண்ட் ஃப்ளோரிலிருந்து துவங்குவோம்.

படிப்படியாக இறுதிக்கு செல்லவேண்டும். இது ஒரு மகிழ்ச்சிதரும் பயணமாக அமையும், இதுதான் எங்க்கள் கனவு, என்னுடையது மட்டுமல்ல, இந்த நாடு முழுதுமான கனவு அந்த இறுதிப் போட்டிக்குள் நுழைவதுதான். மும்பையில் இறுதிப் போட்டியை விளையாடுவது என்பது கனவு ஆனால் அனைத்தும் ஒன்றிணைந்து அங்கு கொண்டு நம்மைச் சேர்க்கவேண்டும்.

நங்கள் எங்களது திறமைக்கேற்ப விளையாடினால், நாங்கள் இத்தனை காலமாக எதனைச் செய்யவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோமோ அது நிகழும்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.

அது போல் தனது ஓய்வு பற்றி குறிப்பிட்ட டெண்டுல்கர், "நான் என்னால் முடிந்த வரை விளையாடவே விரும்புகிறேன், ஆசையும், வேட்கையும் உள்ளவரை விளையாடுவேன், ஒரு நாள் படுக்கையை விட்டு எழுந்திருக்க விருப்பம் இல்லையெனில் அந்த நாள் முதல் வேறு திசையில் போக வேண்டிய நேரம் வந்து விட்டத் என்று பொருள் எனவே எனக்கு அலுக்கும் வரை நான் விளையாடுவேன்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.

திங்கள், 14 ஜூன், 2010

குற்றாலத்தில் சீசன் "ஜோர்"




குற்றாலம் : குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்தால் சீசன் களைகட்டியது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் புதுமைபெற்ற ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. பொதிகை மலை சாரல் என்றாலே குற்றாலம் தான் நினைவிற்கு வரும். இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து சீசன் களைகட்டிவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூன் மாத இறுதியில் தான் சீசன் துவங்கியது.

ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத துவக்கத்திலேயே சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சீசன் துவங்கிய முதல் வாரத்திலேயே அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் அளவு சற்று கூடியது. இதனால் இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலை முதல் சீரான காற்றும், சாரல் மழையும் பெய்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு ஒருதடவை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஐந்தருவி பகுதியில் வெயிலே தெரியாத அளவிற்கு கருமேக கூட்டங்கள் ஒன்றுதிரண்டு திடீர் திடீரென சாரல் மழையை பொழிந்தது. இப்பகுதியில் பலத்த காற்று வீசியது.

ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது

புதன், 2 ஜூன், 2010

கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' எழுதும் ஒன்றாம் வகுப்பு மாணவி

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டரில் சி புரோகிராம் மூலம் கணக்குகள் போட்டு அசத்துகிறார். சி புரோகிராம் என்பது ஓரளவு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே செய்வது. தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் இருந்து இந்த பாடம் நடத்துகின்றனர். கம்ப்யூட்டரை இயக்க தெரிந்து, அடிப்படைகள் தெரிந்த பிறகு "சி புரோகிராம்' பற்றி கம்ப்யூட்டர் கற்று தரும் நிறுவனங்கள் சொல்லித் தருகின்றன. ஆனால், மேலூர் மில்கேட்டை சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியின் மகள் சுவேதா(6) இந்த "புரோகிராமில்' அசத்துகிறார். ஆட்டுக்குளம் மகாத்மா காந்தி வித்யாஸ்ரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் இவர், பல்வேறு வகை கணக்குகளுக்கு கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' மூலம் தீர்வு காண்கிறார். தீர்வு காணும் விதம் குறித்த எந்த கேள்வி கேட்டாலும் விளக்கி கூறுகிறார்.

வியாழன், 6 மே, 2010

மும்பை தாக்குதல் வழக்கில் கஸாப்புக்கு தூக்கு: நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அஜ்மல் கஸாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மு‌ம்பை தா‌க்குத‌ல் வழ‌க்‌கி‌ல் கு‌ற்றவா‌ளி என அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பா‌கி‌ஸ்தா‌ன் ‌தீ‌விரவா‌தி அ‌ஜ்ம‌ல் கஸா‌ப்பு‌க்கான த‌‌ண்டனை ‌விவர‌ம் இ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்படு‌கி‌ன்றது.

166 ப‌ே‌ர்களை ப‌லிவா‌ங்‌கிய மு‌ம்பை தா‌‌க்குத‌‌ல் வழ‌க்‌கி‌ல் ‌உ‌யிருட‌ன் ‌பிடி‌ப‌ட்ட ஒரே ‌தீ‌விரவா‌தி அ‌ஜ்ம‌ல் கஸா‌ப்பை கு‌ற்றவா‌ளி எ‌ன்று மு‌ம்பை ‌சிற‌ப்பு ‌நீ‌தி‌ம‌ன்ற‌ம் கட‌ந்த 4 ஆ‌ம் தே‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

நா‌ட்டி‌ன் ‌மீது போ‌ர் தொடு‌த்தது உ‌ள்‌ளி‌ட்ட 86 வழ‌க்‌குக‌ளி‌ல் கஸா‌ப் கு‌ற்றவா‌ளி எ‌ன்று ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றி‌வி‌த்தது.

72 பேரை கொடூரமாக கொ‌ன்ற கஸா‌ப்‌பி‌ற்கு தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அரசு தர‌ப்பு வழ‌க்‌க‌றிஞ‌ர் உஜ்வால் நிக்காமும், ப‌லியானவ‌ர்க‌ளி‌‌ன் உற‌வின‌ர்களு‌ம் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

கஸா‌ப் ‌மீதான த‌ண்டனை ‌விவர‌ம் மே 6 ஆ‌ம் தே‌தி வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் எ‌ன்று மு‌ம்பை ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ ‌நீ‌திப‌தி எம்.எல். தஹலியானி ஏ‌ற்கனவே ‌அ‌றிவ‌ி‌த்‌திரு‌ந்தா‌‌ர்.

அத‌ன்படி இன்று தீர்ப்பளித்த நீதிபதி எம்.எல். தஹலியானி, குற்றவாளி கஸாப்புக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.கஸாப்பை சாகும் வரை தூக்கிலிடுமாறு அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

கஸாப் மீதான 86 குற்றச்சாற்றுக்களும் நிரூபணமாகி உள்ளதாக தனது தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, 4 குற்றச்சாற்றுக்களின் அடிப்படையில் மரணத்தண்டனை விதிப்பதாகவும், 5 குற்றசாற்றுக்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதிப்பதாகவும் கூறினார்.

"கஸாப் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.இதுபோன்ற ஒரு தீவிரவாதியை உயிருடன் விட்டு வைத்திருப்பது சமூகத்திற்கும், இந்திய அரசுக்கும் ஆபத்தாக அமைந்துவிடும்" என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

கந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை நினைவு கூர்ந்த நீதிபதி, கஸாப் உயிருடன் இருந்தால் அதுபோன்றதொரு சூழ்நிலை மீண்டும் ஏற்படும் என்றார்.

கஸாப் தாமாகவே முன்வந்து லஷ்கர் இயக்கத்தில் சேர்ந்து தன்னை முஜாகிதீனாக (புனித போராளியாக) அறிவித்துக் கொண்டவன்" என்றும் கூறிய நீதிபதி தஹலியானி, கஸாப் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக மூளை சலவை செய்யப்பட்டவன் என்று அவனது சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கே.பி. பவாரின் வாதத்தை நிராகரித்ததோடு, லஷ்கர் இயக்கத்தை தோற்றுவித்த ஹஃபிஷ் சயீத்தின் உத்தரவின் பேரிலேயே கஸாப் செயல்பட்டதாக கூறினார்.

நீதிபதி தஹலியானி தீர்ப்பை படித்துக் கொண்டிருந்தபோது, கஸாப் விசும்பி அழுதான்.ஒரு டம்ளர் தண்ணீர் தருமாறும் அவன் கேட்டான்.

தீர்ப்பை படித்து முடித்ததும்,அதனை இந்தியில் கஸாப்பிடம் விளக்கிய நீதிபதி தஹலியானி, அவன் ஏதாவது சொல்ல விரும்புகின்றானா எனக் கேட்டார். ஆனால் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பதுபோல் தலையை அசைத்து கஸாப் மறுத்தான்.

இதனையடுத்து கஸாப்,பலத்த பாதுகாப்புடன் ஆர்தர் ரோடு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டான.

"டுவிட்டர்' சாதனைக்கு சச்சின் "ரெடி'

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் தனது "டுவிட்டர்' இன்னிங்சை துவக்கியுள்ளார். முதல் நாளில், இவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை எட்டியுள்ளது. மிக விரைவில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சரின் 10 லட்சம் "டுவிட்டர்' ஆதரவாளர்கள் சாதனையை தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"டுவிட்டர்' இணையதளம் மூலம் சிறிய தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதனை, சுருக்கமாக "இன்டர்நெட் எஸ்.எம்.எஸ்' என குறிப்பிடலாம். இதில் புகழ்பெற்றவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தங்களது ஆதரவாளர்களுக்கு இடையே தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வர். இதில் நேற்று சச்சினும் உறுப்பினராக சேர்ந்தார். இவரை பின்பற்றும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 70 ஆயிரத்தை தொட்டுள்ளது. "டுவீட்டர்' இணையதளத்தில் ஹாலிவுட் நடிகர் அஷ்டான் கச்சருக்கு தான் அதிகபட்சமாக 10 லட்சம் ஆதரவாளர்களாக உள்ளனர். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் எடுத்து சாதித்துள்ள சச்சின், மிக விரைவில் அஷ்டான் சாதனையை முறியடிப்பார். "டுவிட்டர்' தளத்தில் சச்சினை பற்றி அறிய http://twitter.com/sachin_rt என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வீரர்களுக்கு வாழ்த்து: "டுவீட்டரில்' இணைந்துள்ள சச்சின், "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சக இந்திய வீரர்கள் சாதிக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல, ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ள சேவக்கிற்கும் வாழ்த்து கூறியுள்ளார். தவிர, தனது அரிய "போட்டோ'க்களையும் வெளியிட்டுள்ளார்.

"கிரிக்கெட் கடவுள்': ஏற்கனவே "டுவீட்டரில்' உறுப்பினராக உள்ள டென்னிஸ் நட்சத்திரம் சானியா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் சச்சினை வரவேற்றுள்ளனர்.
ஷில்பா ஷெட்டி: "டுவிட்டர்' தளத்தில் "கிரிக்கெட் கடவுள்' சச்சின் இடம் பெற்றுள்ளார். இதனை அனைவரிடமும் சொல்லுங்கள். அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கிறேன்.
சானியா: "டுவிட்டர்' மூலம் உங்களை சந்திப்பது மிகவும் நல்ல விஷயம்.
ரித்தேஷ் தேஷ்முக்(நடிகர்): அஷ்டான் கச்சார் சாதனையை சச்சின் முறியடிக்க விரும்புகிறோம். அவரை பின்பற்றுங்கள்.
கரன் ஜோகர்(இயக்குனர்): உரத்த குரலில் சச்சினை வரவேற்கிறேன். "டுவீட்டர்' தளம் மூலம் உற்சாகம் அடையுங்கள்.
தீபிகா படுகோனே: எனக்கு மிகவும் பிடித்த சச்சினை வரவேற்கிறேன். இவர், "டுவிட்டரில்' அதிக ஆதரவாளர்கள் பெற்று சாதிக்க வேண்டும்.
சமீரா ரெட்டி: கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அரசனை வரவேற்போம். "வீ லவ் யு' சச்சின்.

சனி, 1 மே, 2010

சச்சின் பெயரில் புது மாம்பழம்!

மாம்பழ "சீசன்' துவங்கி விட்டது. மார்க்கெட்டில் மல்கோவா, சப்போட்டா உள்ளிட்ட நிறைய வகைகளை காணலாம். இந்த ஆண்டு புதிதாக சச்சின் பெயரில் மாம்பழம் வருகிறது. இவர், விலைமதிப்பில்லாத வீரர் என்பதால், இந்த மாம்பழம் விற்பனைக்கு கிடையாதாம்.
இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு அங்கீகாரமாக குவாலியர் மைதானத்தின் ஒரு பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா பெயர்:
இந்த வரிசையில் தனது புதுவகையான மாம்பழத்துக்கு சச்சின் பெயரை வைத்துள்ளார் உ.பி.,யை சேர்ந்த வயதான விவசாயி கலிமுல்லா கான். இவரை மலிகாபாத் பகுதியில் "மாம்பழ ராஜா' என்றே அழைக்கின்றனர். இது வரை 300 வகையான மாம்பழ வகைகளை உருவாக்கியுள்ள இவர், நாட்டின் உயர்ந்த பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார். இவருக்கு கிரிக்கெட் தவிர, பாலிவுட் நட்சத்திரங்களையும் பிடிக்கும். இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் ஒரு மாம்பழம் மற்றும் கொய்யாப் பழங்களை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து கலிமுல்லா கூறியது:
உலகில் சச்சினை போன்ற சிறந்த வீரர் யாரும் இல்லை. இதனால் தான் புதுவகையான மாம்பழத்துக்கு அவரது பெயரை வைத்தேன். சாசா மற்றும் அமின் வகைகளை கலந்து உருவாக்கியுள்ளேன். இது மிகவும் ருசியாக இருக்கும். கிரிக்கெட் அரங்கின் சூப்பர் "ஹீரோவான' சச்சின், விலைமதிப்பில்லாத வீரர். அவர் ஒன்றும் விற்கும் பொளுளல்ல. இதனால், அவரது பெயரிலான மாம்பழத்தை விற்பனைக்கு தரப் போவதில்லை.
அழகான ஐஸ்வர்யா பெயரில் மாம்பழம் மட்டும் போதாது. இதனால் தான் கொய்யாப்பழமும் உருவாக்கினேன். இரண்டுமே நல்ல சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். ஜூன் மாதம், மாம்பழமாக மாறியதும், மும்பைக்கு சென்று சச்சின் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு பரிசாக அளிப்பேன். இந்த வகை மாமரத்தை சச்சினுக்கு அன்பளிப்பாக வழங்கவும் உள்ளேன். என்னால் பயணம் செய்ய முடியாத பட்சத்தில், எனது மகனை அனுப்பி வைப்பேன்.
இவ்வாறு கலிமுல்லா கூறினார்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

கோப்பை வென்றது சென்னை கிங்ஸ்

கோப்பை வென்றது சென்னை கிங்ஸ் :


ஐ.பி.எல்., பரபரப்பான பைனலில் சுரேஷ் ரெய்னாவின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, சென்னை கிங்ஸ் அணி கோப்பை கைப்பற்றி அசத்தியது. சச்சின் களமிறங்கியும் 22 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் தேடியது.

இந்தியாவில் மூன்றாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடந்தது. நேற்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

சச்சின் பங்கேற்பு: வலது கை விரல் பகுதியில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாது மும்பை கேப்டன் சச்சின் பங்கேற்றார். இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி எதிர்பார்த்தது போல பேட்டிங் தேர்வு செய்தார்.

மந்தமான துவக்கம்: சென்னை அணிக்கு ஹைடன், முரளி விஜய் இணைந்து மந்தமான துவக்கம் தந்தனர். ஹர்பஜன் வீசிய முதல் ஓவரில் ஹைடன் திணற, 4 ரன் தான் எடுக்க முடிந்தது. அடுத்த ஓவரில் மலிங்கா 2 ரன் தான் கொடுத்தார். பின் ஹர்பஜன் பந்தில் ஹைடன் ஒரு சிக்சர் அடித்து நிம்மதி தேடினார். மறுபக்கம் ஜாகிர் பந்தில் முரளி விஜய் ஒரு சிக்சர் அடித்தார். பெர்ணான்டோ வேகத்தில் விஜய்(26) அவுட்டானார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் ஹைடன்(17) வீழ்ந்தார். பெர்ணான்டோ பந்தில் பத்ரிநாத்தும்(14) அவுட்டாக, சென்னை அணி 11.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

அதிவேக அரைசதம்: இதற்கு பின் தோனி, சுரேஷ் ரெய்னா இணைந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் ரன் மழை பொழிந்தனர். மும்பை அணி மோசமாக பீல்டிங் செய்ய, இரு முறை கண்டம் தப்பிய ரெய்னா கலக்கினார். ஜாகிர் ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். பின் போலார்டு ஓவரில் 2 சூப்பர் சிக்சர் விளாசிய இவர், ஐ.பி.எல்., அரங்கில் 9வது அரைசதம் அடித்தார். 24 பந்துகளில் 50 ரன்களை எடுத்த இவர், ஐ.பி.எல்., பைனல்களில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். போலார்டு பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த தோனி 22 ரன்களுக்கு வெளியேறினார். மார்கல் 15 ரன் எடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, ஐ.பி.எல்., பைனல்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ரெய்னா 57 (3 பவுண்டரி, 3 சிக்சர்), அனிருதா ஸ்ரீகாந்த் 6 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

விக்கெட் மடமட: சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணி துவக்கத்தில் ஆட்டம் கண்டது. போலிஞ்சர் வேகத்தில் ஷிகர் தவான் 'டக்' அவுட்டானார். பின் சச்சின், அபிஷேக் நாயர் இணைந்து பொறுப்பாக ஆடினர். மார்கல் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார் சச்சின். மறுமுனையில் ஜகாதி சுழலில் அபிஷேக் வரிசையாக இரண்டு சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் சூடு பிடித்தது. இந்த நேரத்தில் ரெய்னா வீசிய போட்டியின் 12வது ஓவரில் இரட்டை 'அடி' விழுந்தது. தோனியின் துல்லிய 'த்ரோவில்' முதலில் அபிஷேக்(27) ரன் அவுட்டானார். 6வது பந்தில் ஹர்பஜன்(1) அவுட்டானார்.

ஜகாதி அசத்தல்: பின் ஜகாதி வீசிய 15வது ஓவர் திருப்புமுனை ஏற்படுத்தியது. இரண்டாவது பந்தை சச்சின்(48) தூக்கி அடிக்க, முரளி விஜய் 'லபக்' செய்ய, சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 5வது பந்தில் ரெய்னாவின் சூப்பர் 'கேட்ச்சில்' சவுரப் திவாரி(0) நடையை கட்டினார். முரளிதரன் சுழலில் டுமினி(6) காலியானார்.

போலார்டு மிரட்டல்: கடைசி கட்டத்தில் வாணவேடிக்கை காட்டினார் போலார்டு. இவர், போலிஞ்சர் வீசிய 18வது ஓவரில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி சேர்த்து 22 ரன்கள் எடுக்க, போட்டியில் 'டென்ஷன்' ஏற்பட்டது. ராயுடு(21) ரன் அவுட்டானார். மார்கல் பந்தில் ஹைடனிடம் 'கேட்ச்' கொடுத்து போலார்டு(27) வெளியேற, சென்னை அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. போலிஞ்சர் துல்லியமாக பந்துவீச, 4 ரன்களே எடுக்க முடிந்தது. மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைய, உள்ளூர் ரசிகர்கள் சோகமடைந்தனர். 22 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற சென்னை அணி மூன்றாவது ஐ.பி.எல்., கோப்பையை சூப்பராக கைப்பற்றியது.ஆல்-ரவுண்டராக அசத்திய சுரேஷ் ரெய்னா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடர் நாயகன் விருதை சச்சின் வென்றார்.

சபாஷ் தோனி : நேற்றைய பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பை வென்று சாதித்தது. கடந்த 2008ல் நடந்த பைனலில் சென்னை அணி, ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது. கடந்த 2007ல் இந்திய அணிக்கு
'டுவென்டி-20' உலக கோப்பை பெற்றுத்தந்த தோனி, நேற்று சென்னை அணிக்கு ஐ.பி.எல்., கோப்பை பெற்றுத்தந்து, ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

அதிவேக அரைசதம் : சென்னை வீரர் ரெய்னா, 35 பந்தில் 57 ரன்கள் எடுத்ததன்மூலம், ஐ.பி.எல்., அரங்கின் பைனலில் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சாதனை படைத்தார். முன்னதாக ராஜஸ்தான் அணியின் யூசுப் பதான் 56 ரன்கள் (எதிர்-சென்னை, 2008) எடுத்திருந்தார். தவிர, ஐ.பி.எல்., பைனலில் அதிவேக அரைசதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார் ரெய்னா. இவர் 24 பந்தில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சூப்பர் ஜோடி : சென்னை அணிக்கு ரெய்னா- தோனி கைகொடுத்தனர். இவர்கள் நான்காவது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அதிரடியாக ரன் சேர்க்க, முதல் 10 ஓவர்களில் 58 ரன்கள் எடுத்திருந்த சென்னை அணி, அடுத்த 10 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தது.

பீல்டிங் சொதப்பல் : மும்பை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. ரெய்னா 14 ரன் எடுத்திருந்த போது ஜாகிர் பந்தை தூக்கி எடுத்தார். இதனை பிடிக்க பெர்ணான்டோ, அபிஷேக் நாயர் ஓடி வந்து வாய்ப்பை வீணாக்கினர். அடுத்து கைக்கு வந்த 'கேட்ச்சை' ஜாகிர் நழுவ விட்டார். அப்போது 28 ரன் எடுத்திருந்த ரெய்னா, பின் அரைசதம் கடந்து அசத்தினார்.

ஹைடன் வீண் : சென்னை வீரர் ஹைடன் ஆமைவேகத்தில் ஆடி வெறுப்பேற்றினார். ஹர்பஜன் சுழலில் ஒரு முறை எல்.பி.டபியுள்யு., ஆக தெரிந்தார். ஆனால், அம்பயர் ரூடி குயர்ட்சன் தயவில் தப்பினார். இதற்கு பின்பும் சுதாரித்துக் கொள்ளாத இவர் 31 பந்துகளில் வெறும் 17 ரன்களுக்கு(54.83 ஸ்டிரைக் ரேட்) அவுட்டாகி ஏமாற்றினார். பின் முரளிதரன் பந்தில் அபிஷேக் நாயர் கொடுத்த 'கேட்ச்சையும்' நழுவ விட்டார்.

இதுவே அதிகம் : நேற்று, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்த சென்னை அணி, ஐ.பி.எல்., அரங்கின் பைனலில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2008ல் நடந்த பைனலில், ராஜஸ்தான் அணி 164 ரன்கள் (எதிர்-சென்னை) எடுத்தது.

முதல் இந்திய கேப்டன் : நேற்றைய பைனலில் சென்னை அணி வெற்றி பெற்றதன்மூலம், ஐ.பி.எல்., கோப்பை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் வார்ன் (2008, ராஜஸ்தான்), கில்கிறிஸ்ட் (2009, டெக்கான்) கோப்பை வென்றனர்.

சச்சின் முதலிடம் : நேற்றைய பைனலில் 48 ரன்கள் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் சச்சின், மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில், முதலிடம் பிடித்தார். இவர் 15 போட்டியில் 5 அரைசதம் உட்பட 618 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர் 'ஆரஞ்சு' நிற தொப்பியை தன்வசப்படுத்திக் கொண்டார். இவரை தொடர்ந்து காலிஸ் (572 ரன், பெங்களூரு), ரெய்னா (520 ரன், சென்னை), கங்குலி (493 ரன், கோல்கட்டா), முரளி விஜய் (458 ரன், சென்னை) ஆகியோர் உள்ளனர்.

வியாழன், 18 மார்ச், 2010

என் சோக பாட்டு

லவ் பெயில் உள்ளவங்க எல்லோருக்கும் இந்த பாட்டு கண்டிப்பா பிடிக்கும்...எனக்கு சேரன் நடித்த படத்துல இந்த பட்டு தான் ரொம்ப பிடிக்கும்.இந்த பாட்டுல சூப்பரா நடிச்சு இருப்பார்.அதும் நம்மளே மாதிரி பீர் அடிச்சிட்டு (நாங்க எல்லாம் அப்டி இல்லன்னு சொன்ன நீங்க நம்ம்பவா போறீங்க..நாங்க ரூம்ல மட்டும் தான் அப்டி இருப்போம்..யாருக்கும் தெரியாது ) அந்த மார்க்கெட்ல விழுந்து கிடக்குற சீன்...............டிவில பார்க்கும் போது சில நேரம் கண் கூட கலங்கலாம் அதற்கு நான் பொறுப்பு இல்ல...


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

தாய் தந்தைகாக என்னை பிரியே
காதல காகிதமா தூக்கி ஏறியே
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனால் முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கே வில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்றே ஒரு நொடிக்காக்ஹா
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்கே உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய் பட்டு
என்னை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தை கூடி எரிக்கிறதே
ச்வாசிக்கேகூடே முடியவில்லை
எனை வாசிக்கே மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கே வில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

இந்த பாட்ட பார்க்கணும்னு நினைச்சா இந்த லிங்க கிளிக் பண்ணுங்க

http://www.youtube.com/watch?v=MjT2KPl-FhM

செவ்வாய், 9 மார்ச், 2010

அவன் எங்க பா..ஒரு வாரம் சஸ்பென்ட்

என்னை பற்றி கொஞ்சம் அறிமுகம்:
நான் அப்போது இன்ஜினியரிங் படித்து கொண்டு இருந்தான்(சத்தியமா நம்புங்க ).வீட்டு பக்கத்ல தான் என் கல்லுரி..இருந்தாலும் என் அப்பா தான் ஹோச்டேளில் விட்டுட்டார்...தொந்தரவு தாங்க முடியாம இருக்கும்னு இப்ப தான் தோணுது.ஆனா என் அப்பாவுக்கு தான் நான் ரொம்ப நன்றி சொல்லனும்.ஏனா எனக்கு ஹோச்டேளில் தான் அதிக நண்பர்கள் கிடைத்தனர்.ஹோச்டேளில் இருந்து பார்த்தல் தானே தெரியும்... ஆனா நாங்க வீகேன்ட்ல ஹோச்டேல இருந்தேய்தே கிடயாது...ஹே ஹே ஏன வாலிப வயசு ..இப்பவும் யூத்து தான்.எங்களை பார்த்தாலே எங்க தேபர்த்மேன்ட் அலறும்.நம்புங்க நாங்க எல்லாம் டேர்றோர்.

நாங்க பண்ணாத ரவுடிசம் இல்ல.இப்பம் மட்டும் ஒரு சின்ன சாம்பிள் சொல்ற்றேன்.ஆனா அதுக்கு முன்னலா எங்க வார்டென பத்தி சொல்ற்றன்..அவன பத்தி சொல்ல ஒன்னும்இல்ல.ஏன அவன் ரொம்ப கேவலமாணவன்.இப்படி எல்லாம் அவன சொல்ல வேண்டி இருக்கு.அவனுக்கும் எங்களுக்கும் ஓத்து வராது.ஆனா அவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.அது என்னனு என் நண்பர் சில பேருக்கு தெரியும்..எல்லாம் யூத் மேட்டர் தான்(சைட் அடிக்குறது ) வேறா ஒன்னும் நீங்க நினிகேற மாதிரி இல்ல.அந்த மாதிரி லைப் இனிமேலும் வாரது.

ஹலோ நான் சாரதன ஆள் இல்ல மிக பெரிய ரவுடி..பின்ன எவ்ளோ அரியர்ஸ் பேப்பர் எல்லாம் கிளியர் பண்ணி ஒரு வழிய டிகிரி சேர்டிபிகடே வங்கிடோம்ல. ஆறாவது செமஸ்டர் தேர்வு நேரம் நான் அரியர்ஸ் பேப்பர்கு படித்துகொண்டு இருந்தேன்.அதன் கணக்கு பேப்பர் தான் .நமக்கு தான் கணக்கு வரதே.சில ஜூனியர் கிட்ட டவுட் கேட்டு படிச்சிட்டு இருந்தேன்.அது தான் என் நல்ல நேரம்னு நினைகிறேன்.அப்பம் பார்த்து தான் நம்ம பசங்க சும்மா இருக்கமா ரூம்ல உள்ள டேபிள்எ எடுத்து படிக்கறது வசதியா கொஞ்சம் தட்ட ஆரம்பிச்சிட்டாங்க. டேபிள் சரியல்ல காரணமோ என்னனு தெரியல.அது தான் அவங்க கேட்ட நேரம்..அவங்க தட்டுனுன தட்டுல அந்த வார்டன் கரெக்ட்எ எங்க ரூம் முன்னாடி நின்னு உடனே காலேஜ் ப்ரினிசிபாலிடம் குட்டிட்டு போயிட்டான்.அந்த இடத்தில் நான் இல்லவேஇல்ல.

இப்பம் ப்ரிசிபால் ரூம்க்கு எல்லோரும் போனாங்க.அவரு போன உடனே எங்க பா அவன்(என்னைத்தான் அப்படி சொன்னார்...அந்த அளவுக்கு நாங்க பிரபலம் ).போங்க எல்லோரும் போங்க ஒரு வாரம் சஸ்பென்ட் நு சொல்லிட்டார்.அட பாவிகளா செய்யாத தப்புக்கு நானா தண்டனை அவபவிகனும்.கடைசியா போகும் பொது எப்பா அவனினும்(என்னை தான் )குட்டிட்டு போங்க அவனினும் சஸ்பென்ட் பண்ணி இருக்குன சொல்லிட்டார்.என்ன கொடுமை சார் இது???????

கடைசியா நான் அந்த இடத்திலே இல்லன்னு எவ்ளோ உண்மை சொல்ல வேண்டி இருந்தது தெர்யும.இந்த நேரத்தில் வேற அந்த வார்டன் என்னை வலை வீசி தேடிக்கொண்டு இருந்தான்.அவனுக்கு எனமேல அவ்வளவு பாசம்.கடைசியா நான் தப்பித்து விட்டேன்.

எப்படி இருந்தது கருத்துகளை சொல்லலாம்....

திங்கள், 8 மார்ச், 2010

டீலா நொடீலா

எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டு தான்..நன்றி சன் தொலைகாட்சி ....இவங்கள அமெரிகாளவுல நடுக்குற ஒரு ப்ரோகிராம அப்படிய காப்பி பண்ணிட்டாங்க...
டிவி ல தான் போய் விளைய்டமுடியலன்னு கவலை படாதீங்க...இப்போது நீங்களும் டீலா நொடீலா விளையாடலாம்.....
கீழே உள்ள filea டவுன்லோட் பண்ணி நீங்களும் விளையாடுங்க..
ஒரே வார்த்தை ஒகுன்னு வாழ்கை.....


file:///C:/Documents%20and%20Settings/mariappan/Desktop/DEAL_OR_NO_DEAL(1).xls




கேம் எப்படி இருந்தது விளையாடிட்டு சொல்லுங்க..கண்டிப்பா பிடிச்சிருக்கும்

சனி, 6 மார்ச், 2010

என் பாட்டு

என் மனசுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு...இந்த பாட்டுக்கு நான் எப்போதும் அடிமை அது எனு சொல்ல முடியல..ஆனா ஒன்னு இந்து பாட்டு கேக்கும் பொது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
தேவா ரொம்ப நல்லா பண்ணி இருகார்..எந்த பாட்டோடட காபின்னு தெரியாது....ஹரிஹரன்ன பத்தி சொல்லவே வேண்டாம்..வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும்......நீங்களும் ஒரு தடவை கேட்டு பாருங்க பிடிக்கும்...

படம்:மின்சார கண்ணா ( கொஞ்சம் சுமாரா தான் இருக்கும்..ஆனா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.)



உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்
உன் தோல் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆகா ஆசைதான்

(உன் பேர் சொல்ல ...)

கண்ணில் கடைகண்ணில் நீயும் பார்த்தல் போதுமே
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னை படைததாலே ...

(உன் பேர் சொல்ல ...)

நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்
வானின்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே ...

(உன் பேர் சொல்ல ...)

எனக்கு ரொம்ப பிடிச்ச இருண்டு வரிகள்

தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே


உங்க கருத்துகளை பதிவு செய்க.....

வியாழன், 4 மார்ச், 2010

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு.....

படம் :பையா
நீங்களும் ஒரு தடவை கேட்டு பாருங்க கண்டிப்பா பிடிக்கும்.யுவன் ரொம்ப சூப்பரா படிச்சு இருக்கார் .....


ஏன் காதல் சொல்ல நேரம் இல்லை ,
உன் காதல் சொல்ல தேவையில்லை ,
நாம் காதல் சொல்ல வார்த்தை இல்லை ,
உண்மை மறைத்தாலும் மறையாதடிஈ …

உன் கையில் செய்ற ஏங்கவில்லை ,
உன் தொழில் சாயா ஆசையில்லை ,
நீ போன pinbu சோகம் இல்லை ,
இன்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே , உன் அழகாலே ,
ஏன் வெயில் காலம் அது மாழைகாலம்
உன் கனவாலே , உன் கனவாலே ,
மனம் அலை பாயும் , நல்ல குடை சாயும் ..யெஹ்ஹ்ஹ

ஏன் காதல் சொல்ல நேரம் இல்லை ,
உன் காதல் சொல்ல தேவையில்லை ,
நாம் காதல் சொல்ல வார்த்தை இல்லை ,
உண்மை மறைத்தாலும் மறையாதடீஈ

காற்றோடு கை வீசி நீ பேசினால் ,
உந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே ..
வயதொடும் மனதோடும் சொல்லாமலே ,
சில்லா எண்ணங்கள் வலை வீசுதே

காதல் வந்தாலே கண்ணோடுதான் ,
கள்ளத்தனம் வந்து குடி யெருமொஹ் ..
கொஞ்சும் நடிதேனடி , கொஞ்சும் துடிதேனடி ,
இந்த விளையாட்டை ராசிதேனடி ..

உன் விழியாலே , உன் விழியாலே ,
ஏன் வழி மாறும் , கண் தடுமாறும் ..
அடி இது ஏதோ , ஒரு புது ஏக்கம் ,
இது வழித்தாலும் நெஞ்சம் அதை -எற்கும்ம் ..ஹே

சூப்பரா இருக்குல கேட்டு பதில் சொல்லுங்க.....