செவ்வாய், 22 டிசம்பர், 2009
காதலிப்பது எப்படி?
1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து
விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால்
அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..
2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை
வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்).
முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால்
நல்லது.
3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம்.
தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.
4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட
வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது.
முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது
அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக
சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும்
திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.
7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட்
ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை
அழிக்கணும் இல்லை.
8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு
கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு
வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.
9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம்.
பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that,
Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு
இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.
10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது
வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே
வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான்
தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட்
கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க
இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும்
மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க
ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே
வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும்,
அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட
உதவும்.
11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை
மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு
சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி
போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல
கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)
12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு
விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ
தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி
வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால்
கொடுக்க கூடாது.
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு
காதல் மன்னன்தான்...
வியாழன், 17 டிசம்பர், 2009
உலகிலேய மிக உயரமான கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயில் அமைந்துள்ளது. இதன் உயரம் 2 ஆயிரத்து 600 அடி ஆகும்.
புர்ஜ் துபாய் (துபாய் கோபுரம்) என்ற அந்த கட்டிடம் துபாய் நகரின் மையப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. 100 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தை 3 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டி முடித்துள்ளனர்.
இதை விட உயரமான கட்டடங்கள் கட்டுவதற்கான திட்டப் பணிகள் நடந்து வந்தாலும், தற்போதைய நிலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிக உயரமான கட்டடம் என்ற புகழை புர்ஜ் துபாய் கட்டடம் பெறுகிறது.
இந்த கட்டடத்தைக் கட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். இந்த கட்டிடம் வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி திறந்துவைக்கப்பட இருந்தது. சில முக்கியப் பணிகள் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.
துபாயின் மன்னராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம் பதவி ஏற்ற 4-வது ஆண்டு தினத்தில் இந்த கட்டிடம் திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தளங்களில் இதுவும் ஒன்றாக இணைய உள்ளது. இனி துபாய் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அப்பகுதியில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கும் கூட இந்த புர்ஜ் துபாய் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
உலகிலேயே மிக உயரமான கட்டடம் என்றதும், ஒரு சாதாரண விஷயமாக நாம் கருதிவிட முடியாது.
100வது மாடிக்குச் செல்லும் லிப்ட் சேவை, நகரும் படிகட்டுள், குடிநீர் சேவை போன்றவற்றை நாம் யோசித்தால்தான் சற்று விளங்கும் இதன் சாதனை.
அதாவது, இந்த கட்டடம் முழுமைக்கும் ஒரு நிமிடத்திற்கு 10,000 டன் குளிர் காற்று அனுப்பப்பட வேண்டும். ஒரு நாள் முழுமைக்கும், இந்த கட்டடத்தின் அனைத்து மாடிகளுக்கும் செல்லும் நீரின் அளவு எவ்வளவுத் தெரியுமா? 9,46,000 லிட்டர்.
இங்கு இரண்டு லிப்ட் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 21 நபர்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிப்டுகள் ஒரு நொடிக்கு 18 மீட்டர் தூரம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிக உயரத்திற்கு அமைக்கப்பட்ட லிப்ட் வசதி இதுவாகத்தான் உள்ளது.
இதில் பல உணவகங்களும், ஷாப்பிங் மால்களும், நிறுவனங்களும், ஹோட்டல்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டடம் திறந்த பிறகு, துபாயில் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்டின் சரிந்துள்ள பொருளாதாரம் உயர்வை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை விட உயரமான கட்டடங்கள் கட்டுவதற்கான திட்டப் பணிகள் நடந்து வந்தாலும், தற்போதைய நிலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிக உயரமான கட்டடம் என்ற புகழை புர்ஜ் துபாய் கட்டடம் பெறுகிறது.
இந்த கட்டடத்தைக் கட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவார்கள். இந்த கட்டிடம் வருகிற டிசம்பர் மாதம் 2-ந் தேதி திறந்துவைக்கப்பட இருந்தது. சில முக்கியப் பணிகள் காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்கப்பட இருக்கிறது.
துபாயின் மன்னராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம் பதவி ஏற்ற 4-வது ஆண்டு தினத்தில் இந்த கட்டிடம் திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தளங்களில் இதுவும் ஒன்றாக இணைய உள்ளது. இனி துபாய் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அப்பகுதியில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கும் கூட இந்த புர்ஜ் துபாய் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
உலகிலேயே மிக உயரமான கட்டடம் என்றதும், ஒரு சாதாரண விஷயமாக நாம் கருதிவிட முடியாது.
100வது மாடிக்குச் செல்லும் லிப்ட் சேவை, நகரும் படிகட்டுள், குடிநீர் சேவை போன்றவற்றை நாம் யோசித்தால்தான் சற்று விளங்கும் இதன் சாதனை.
அதாவது, இந்த கட்டடம் முழுமைக்கும் ஒரு நிமிடத்திற்கு 10,000 டன் குளிர் காற்று அனுப்பப்பட வேண்டும். ஒரு நாள் முழுமைக்கும், இந்த கட்டடத்தின் அனைத்து மாடிகளுக்கும் செல்லும் நீரின் அளவு எவ்வளவுத் தெரியுமா? 9,46,000 லிட்டர்.
இங்கு இரண்டு லிப்ட் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 21 நபர்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிப்டுகள் ஒரு நொடிக்கு 18 மீட்டர் தூரம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே மிக உயரத்திற்கு அமைக்கப்பட்ட லிப்ட் வசதி இதுவாகத்தான் உள்ளது.
இதில் பல உணவகங்களும், ஷாப்பிங் மால்களும், நிறுவனங்களும், ஹோட்டல்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டடம் திறந்த பிறகு, துபாயில் மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்டின் சரிந்துள்ள பொருளாதாரம் உயர்வை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி இரண்டு படங்களும் சுமார். இந்தப் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம். விஜய் வழக்கத்தைவிட கூடுதலாகவே உழைத்திருக்கிறார் வேட்டைக்காரனுக்காக.
பாபு சிவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சில நாட்களுக்குமுன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு களித்தார் விஜய். படத்தைப் பார்த்த அனைவரும் பாஸிட்டிவ்வான அபிப்ராயம் சொன்னதில் இளைய தளபதிக்கு ரொம்பவே மகிழ்ச்சி. விஜய் ரசிகர்களை வசீகரிக்கும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறதாம்.
விஜய்யின் கடைக்கண் பார்வையில் இருக்கும் இயக்குனர்களின் பட்டியலில் பேரரசுவின் பெயரும் இருக்கிறது. விரைவில் விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவார் என்ற செய்தியை ரசிகர்கள் தாராளமாக நம்பலாம். வேட்டைக்காரனை ரசித்தவர்களில் பேரரசுவும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
பாபு சிவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை சில நாட்களுக்குமுன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு களித்தார் விஜய். படத்தைப் பார்த்த அனைவரும் பாஸிட்டிவ்வான அபிப்ராயம் சொன்னதில் இளைய தளபதிக்கு ரொம்பவே மகிழ்ச்சி. விஜய் ரசிகர்களை வசீகரிக்கும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறதாம்.
விஜய்யின் கடைக்கண் பார்வையில் இருக்கும் இயக்குனர்களின் பட்டியலில் பேரரசுவின் பெயரும் இருக்கிறது. விரைவில் விஜய்யை வைத்து அவர் படம் இயக்குவார் என்ற செய்தியை ரசிகர்கள் தாராளமாக நம்பலாம். வேட்டைக்காரனை ரசித்தவர்களில் பேரரசுவும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.
விஜய்யின் ஐம்பதாவது படம் என்ற ஜிகுஜிகு லேபிளுடன் தயாராகி வருகிறது சுறா. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தின் உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.
ஒரு படம் முடிந்த பிறகே அதன் உரிமையை வாங்குவது சன் பிக்சர்ஸின் வழக்கம். மாறாக சுறா அண்டர் புரொடக்சனில் இருக்கும்போதே ஒட்டுமொத்த உரிமையை வாங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சங்கிலி முருகன் தயாரித்துவரும் சுறாவில் விஜய் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.
ஏறக்குறைய 32 கோடிகள் கொடுத்து சுறாவை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு படம் முடிந்த பிறகே அதன் உரிமையை வாங்குவது சன் பிக்சர்ஸின் வழக்கம். மாறாக சுறா அண்டர் புரொடக்சனில் இருக்கும்போதே ஒட்டுமொத்த உரிமையை வாங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சங்கிலி முருகன் தயாரித்துவரும் சுறாவில் விஜய் ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.
ஏறக்குறைய 32 கோடிகள் கொடுத்து சுறாவை சன் பிக்சர்ஸ் வாங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேமர் ரோச் என்ற இளம் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளரின் பவுன்சரில் அடி வாங்கி காயமேற்பட்டு வெளியேறியது தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக நிகழ்ந்தது இது சற்றே தனக்கு சங்கடத்தைத் தருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
பாண்டிங் களமிறங்கிய முதல் 3 பந்துகளையும் பவுன்சராக வீசி திணறைத்தார் ரோச். இதில் இரண்டாவது பந்தில் ரிக்கி பாண்டிங் முழங்கையில் அடிப்பட்டுக் கொண்டார்.
அதன் பிறகு ரோச் வீசிய மற்றொரு ஓவரில் சவாலை சந்திக்க முடிவெடுத்து 2 பவுண்டரி ஒரு ஹூக் சிக்சரையும் அடித்தார் பாண்டிங். ஆனால் அவரால் வலி பொறுக்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேற நேர்ந்தது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய பாண்டிங், மைதானத்தை விட்டு காயம் காரணமாக வெளியேறுவது தனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ஒன்று என்று கூறினார்.
பாண்டிங் களமிறங்கிய முதல் 3 பந்துகளையும் பவுன்சராக வீசி திணறைத்தார் ரோச். இதில் இரண்டாவது பந்தில் ரிக்கி பாண்டிங் முழங்கையில் அடிப்பட்டுக் கொண்டார்.
அதன் பிறகு ரோச் வீசிய மற்றொரு ஓவரில் சவாலை சந்திக்க முடிவெடுத்து 2 பவுண்டரி ஒரு ஹூக் சிக்சரையும் அடித்தார் பாண்டிங். ஆனால் அவரால் வலி பொறுக்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேற நேர்ந்தது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய பாண்டிங், மைதானத்தை விட்டு காயம் காரணமாக வெளியேறுவது தனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ஒன்று என்று கூறினார்.
புதன், 16 டிசம்பர், 2009
சரியான நேரத்தில் சொல்லிவிட வேண்டும்
உங்கள் காதலைப் பற்றி உங்களுக்கு எப்போது அதீத நம்பிக்கை வருகிறதோ அப்போதுதான் நீங்கள் அதனை கூறுவீர்கள். அப்படி வரும்வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அவரும் நம்மை காதலிக்கிறார் என்று தெரிந்து கூறும் காதலும் உண்டு, நாம் காதலை உணர்த்தியப் பிறகே அவருக்கு நம் மீது ஈர்ப்பு வர வேண்டும் என்ற வகையும் உண்டு.
கல்லை எறிந்து பார்ப்போம், விழுந்தால் மாங்காய், இல்லாவிட்டால் கல்தானே போகும் என்று அலட்சிய மனப்பாங்குடன் காதலைச் சொன்னால் கண்டிப்பாக தோல்விதான் கிடைக்கும்.
உங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அந்த பேச்சுவார்த்தை சாதாரண நண்பர்கள் போலவா அல்லது நெருங்கிய நண்பர்கள் போல் இருக்கிறதா என்பதை அலச வேண்டும்.
சாதாரண நண்பர்கள் போல் என்றால் நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருந்து உங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு காதலைச் சொல்லலாம். ஆனால் அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
நெருங்கிய நண்பர்கள் போன்ற உறவு இருந்தால் நல்ல முறையில் காதலை உணர்த்துங்கள்.
சரியான நேரத்தில் சொல்லப்படாத காதல் வெற்றியை நோக்கு செல்வதே இல்லை. காதல் ஐஸ்கிரீம் மாதிரி. உருகுவதற்குள் சொல்லிவிட வேண்டும். இல்லை என்றால் காலி கப் தான் கையில் மிஞ்சும்.
சனி, 12 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)