புதன், 30 ஜூன், 2010

நெ‌ல்லை, பா‌ண்டிய‌ன் விரைவு இரயில்க‌ளி‌ன் நேரம் மாற்றம்




செ‌ன்னை எழு‌ம்பூ‌‌ரி‌ல் இரு‌ந்து புற‌ப்படு‌ம் நெல்லை, பா‌ண்டிய‌ன் விரைவு இர‌யி‌ல்க‌ளி‌ன் நேரமு‌ம், செ‌ன்‌ட்ர‌லி‌ல்‌ இரு‌ந்து புற‌ப்படு‌ம் மும்பை ‌விரைவு இர‌யி‌‌லி‌ன் நேர‌மு‌ம் ம‌ா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் ‌விரைவு இர‌யி‌‌‌ல் காலை 11.45 மணிக்கு பதிலாக இனி காலை 11.55 மணிக்கு புறப்ப‌ட்டு‌ச் செ‌ல்லு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் இரயில் மதியம் 2 மணிக்கு பதிலாக 2.45 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் பாட்னாவில் இருந்து பெங்களூர் செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பெங்களூரில் இருந்து தர்பங்கா செல்லும் இரயில் சென்ட்ரலில் இருந்து 3.30 மணிக்கு பதிலாக 4.15 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழும்பூரில் இருந்து புறப்படும் செங்கோட்டை பொதிகை ‌விரைவு இர‌யி‌ல் இரவு 8.50 மணிக்கு பதிலாக இனி 8.05 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் இரவு 9.15 மணிக்கு பதி‌க்கு புற‌ப்படு‌ம் நெ‌ல்லை ‌விரைவு இர‌யி‌ல் இரவு 8.50 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இரவு 9.45 மணிக்கு புற‌ப்படு‌ம் மதுரை பாண்டியன் ‌விரைவு இர‌யி‌ல் இரவு 9.15 மணிக்கு புறப்ப‌ட்டு செ‌ல்லு‌ம் எ‌ன்று‌ம் எழும்பூர்-ராமேசுவரம் இரயில் 7.55 மணிக்கு பதிலாக 9.40 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌‌வி‌‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழும்பூரில் இருந்து பகல் 1.05 மணிக்கு புற‌ப்படு‌ம் ராமேசுவரம்-வாரணாசி இரயில் 1.10 மணிக்கு புறப்படும் எ‌ன்று‌ தெ‌ற்கு இர‌யி‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

திங்கள், 21 ஜூன், 2010

முத்த காட்சியில் நடித்துவிட்டு கதறி அழுத நடிகை





பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஆறாவது வனம் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி, ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வசித்து வருகிறார். அந்த கிராமம் அப்படி வெறிச்சோடி கிடப்பதற்கு காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் கரு. இதில் புதுமுகங்கள் பூஷண் -வித்யா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் புவனேஷ் இயக்குகிறார். எஸ்.எம்.தியாகராஜன் தயாரிக்கிறார்.

கதைப்படி, நாயகனும், நாயகியும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும், 2 சாதியை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க துடிக்கிறார்கள். கதாநாயகன் பூஷண், கதாநாயகியின் தாய்மாமனை வெட்டி சாய்ப்பதற்கு அரிவாளுடன் பாய்ந்து வருகிறான். அதைப்பார்த்த கதாநாயகி வித்யா, தாய் மாமனையும் காப்பாற்ற வேண்டும்....காதலனையும் கொலைப்பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்... அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறார். கதாநாயகனின் மனதை மாற்றுகிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். உடனே, அரிவாளுடன் பாய்ந்து வரும் கதாநாயகன் பூஷணை கட்டிப்பிடித்து, உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார்.

இந்த காட்சியை படமாக்க இயக்குனர் புவனேஷ் திட்டமிட்டார். முத்தம் கொடுப்பது பற்றி நாயகியிடர், டைரக்டர் விளக்கினார். முதலில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கத் தயங்கிய அறிமுக நாயகி வித்யா, பின்னர் ஒப்புக் கொண்டார். பொள்ளாச்சி அருகில் உள்ள மலைப்பகுதியில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேர்களுக்கு மத்தியில், அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டது. நடித்து முடித்ததும், வித்யா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதார். அழுதபடியே அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு போய் விட்டார். அங்கு போனபிறகும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. டைரக்டர் புவனேஷ் ஓட்டலுக்கு சென்று வித்யாவை சமாதானப்படுத்தி, படமாக்கப்பட்ட காட்சியை `மானிட்டரில்' திரையிட்டு காண்பித்தார். விரசம் இல்லாமல் அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டு இருந்ததால், வித்யா சமாதானம் ஆனார். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி மலைப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

புதன், 16 ஜூன், 2010

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி




ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற் றோரிடம் வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பள்ளியில் நடந்த சம்பவம் உண்மைதான். எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. மாணவியின் விருப்பமின்றி டி.சி.,யை கொடுக்க கூடாது. மாணவியின் நலன் கருதி அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

செவ்வாய், 15 ஜூன், 2010

உலகக்கோப்பை இறுதியே கனவு - சச்சின் டெண்டுல்ல்கர்




2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதையடுத்து, குறிப்பாக இறுதிப் போட்டி தன் சொந்த ஊரான மும்பையில் நடைபெறுவதையடுத்து இறுதிப் போட்டியில் நுழைவதுதான் கனவு என்று இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

"உலகக்கோப்பையைப் பொறுத்தவரை அனைத்தும் ஒரு வளர்ச்சிப்போக்குதான், நாங்கள் உடனடியாக 50-வது ஃபுளோருக்குத் தாவ விரும்பவில்லை. முதலில் கிரவுண்ட் ஃப்ளோரிலிருந்து துவங்குவோம்.

படிப்படியாக இறுதிக்கு செல்லவேண்டும். இது ஒரு மகிழ்ச்சிதரும் பயணமாக அமையும், இதுதான் எங்க்கள் கனவு, என்னுடையது மட்டுமல்ல, இந்த நாடு முழுதுமான கனவு அந்த இறுதிப் போட்டிக்குள் நுழைவதுதான். மும்பையில் இறுதிப் போட்டியை விளையாடுவது என்பது கனவு ஆனால் அனைத்தும் ஒன்றிணைந்து அங்கு கொண்டு நம்மைச் சேர்க்கவேண்டும்.

நங்கள் எங்களது திறமைக்கேற்ப விளையாடினால், நாங்கள் இத்தனை காலமாக எதனைச் செய்யவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோமோ அது நிகழும்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.

அது போல் தனது ஓய்வு பற்றி குறிப்பிட்ட டெண்டுல்கர், "நான் என்னால் முடிந்த வரை விளையாடவே விரும்புகிறேன், ஆசையும், வேட்கையும் உள்ளவரை விளையாடுவேன், ஒரு நாள் படுக்கையை விட்டு எழுந்திருக்க விருப்பம் இல்லையெனில் அந்த நாள் முதல் வேறு திசையில் போக வேண்டிய நேரம் வந்து விட்டத் என்று பொருள் எனவே எனக்கு அலுக்கும் வரை நான் விளையாடுவேன்." என்றார் சச்சின் டெண்டுல்கர்.

திங்கள், 14 ஜூன், 2010

குற்றாலத்தில் சீசன் "ஜோர்"




குற்றாலம் : குற்றால அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்தால் சீசன் களைகட்டியது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் புதுமைபெற்ற ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. பொதிகை மலை சாரல் என்றாலே குற்றாலம் தான் நினைவிற்கு வரும். இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து சீசன் களைகட்டிவிடும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூன் மாத இறுதியில் தான் சீசன் துவங்கியது.

ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாத துவக்கத்திலேயே சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சீசன் துவங்கிய முதல் வாரத்திலேயே அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழத் துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் அளவு சற்று கூடியது. இதனால் இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நேற்று காலை முதல் சீரான காற்றும், சாரல் மழையும் பெய்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு ஒருதடவை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஐந்தருவி பகுதியில் வெயிலே தெரியாத அளவிற்கு கருமேக கூட்டங்கள் ஒன்றுதிரண்டு திடீர் திடீரென சாரல் மழையை பொழிந்தது. இப்பகுதியில் பலத்த காற்று வீசியது.

ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது

புதன், 2 ஜூன், 2010

கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' எழுதும் ஒன்றாம் வகுப்பு மாணவி

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு மாணவி கம்ப்யூட்டரில் சி புரோகிராம் மூலம் கணக்குகள் போட்டு அசத்துகிறார். சி புரோகிராம் என்பது ஓரளவு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே செய்வது. தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் இருந்து இந்த பாடம் நடத்துகின்றனர். கம்ப்யூட்டரை இயக்க தெரிந்து, அடிப்படைகள் தெரிந்த பிறகு "சி புரோகிராம்' பற்றி கம்ப்யூட்டர் கற்று தரும் நிறுவனங்கள் சொல்லித் தருகின்றன. ஆனால், மேலூர் மில்கேட்டை சேர்ந்த சிவகுமார், மலர்விழி தம்பதியின் மகள் சுவேதா(6) இந்த "புரோகிராமில்' அசத்துகிறார். ஆட்டுக்குளம் மகாத்மா காந்தி வித்யாஸ்ரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் இவர், பல்வேறு வகை கணக்குகளுக்கு கம்ப்யூட்டரில் "சி புரோகிராம்' மூலம் தீர்வு காண்கிறார். தீர்வு காணும் விதம் குறித்த எந்த கேள்வி கேட்டாலும் விளக்கி கூறுகிறார்.